மதுரை அருகே ரூ.5.29 லட்சம் மதிப்புள்ள 500க்கும் அதிகமான குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் தொடங்கி தேர்தல் பறக்கும்படையினர், நாடு முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், மதுரை அருகே ரூ.5.29 லட்சம் மதிப்புள்ள 500க்கும் அதிகமான குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை அருகே காரைக்கிணறு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து மதுரையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு 125 பெட்டிகளில் 500க்கும் மேற்பட்ட குக்கர்களை ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது மதுரையில் உள்ள மண்டபங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு கொண்டு செல்வதாக வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் அவர்களில் இல்லை. அதனால் வாகனத்தை பறிமுதல் செய்து மதுரை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் திருமண மண்டபங்களுக்கு குக்கர்களை கொண்டு செல்வதால் வாக்காளர்களுக்கு அளிக்க குக்கர்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றன.
இதனிடையே மக்களவைத் தேர்தல், தமிழக இடைத்தேர்தலுக்கு குக்கர் சின்னத்தை பொது சின்னமாக ஒதுக்கக்கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைகால மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை பதிவு செய்யப்படாததால் சுயேச்சையாகவே கருதுவதாகவும் இதனால், பொதுச்சின்னம் கொடுக்க முடியாது என்றும், தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் குக்கர் சின்னத்தை ஒதுக்க மறுத்துவிட்டனர்.இருந்தாலும் பொதுச் சின்னத்தை வழங்க பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டனர். அதன்படி டிடிவி தினகரன் தற்போது பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Loading More post
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தி?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?