மக்களவை தேர்தலில் 50% மின்னணு வாக்கு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகளை எண்ண உத்தரவிட வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வரும் 25ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து பதில் அளிக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியிருந்தன. இந்நிலையில் வாக்கு இயந்திரங்களில் வாக்களிக்கும் போது வெளியாகும் ஒப்புகைச் சீட்டை எண்ணி பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என அவை கோரியிருந்தன.
ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த பட்சம் 50 வாக்கு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை ஒப்புகைச்சீட்டு இயந்திர பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 கட்சியினர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் வாக்கு இயந்திர பதிவுகளுடன் ஒப்புகை சீட்டு பதிவுகளை எண்ணி பின்னர் ஒபபீடு செய்து சரி பார்க்க இயலுமா என்று தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்டுள்ளது.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!