பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பாக வழக்கின் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சியில், மாணவிகள் மற்றும் பெண்களை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில், மணிகண்டன் என்பவர் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பெண்களை வீடியோ எடுத்து மிரட்டியது தொடர்பாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக செந்தில், பாபு, வசந்தகுமார், நாகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
புகார் அளித்த மாணவியின் சகோதரரை மிரட்டிய விவகாரத்தில், தானும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக மணிகண்டன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.இதனையடுத்து, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறை, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கு விசாரணை மார்ச் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Loading More post
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம் - சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி: போராட்டக்களத்தில் தொடரும் வகுப்புகள்!
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?