அதிமுக சார்ந்த மத்திய ஆட்சி அமையும், அதில் அதிமுக மத்திய அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளா்களை சந்தித்த அவர், “பிரதமா் மோடி இந்தியாவின் டாடியாக உள்ளாதால் அவரை கண்டு தீவிரவாதிகள் பயந்து ஓடுகிறார்கள். அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும். தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் கூட்டணி முடிவு இன்று அல்லது நாளை தெரியவரும்.
அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிமுக சார்பில் மத்தியில் ஆட்சி அமையும். அதில் அதிமுக அமைச்சர்கள் பங்கு பெறுவார்கள். அதிமுக ஆல மரம். அதில் உட்காருந்து பழம் பறிக்கலாம். தேர்தல் களத்தில் அதிமுக சார்பில் ஒரு கூட்டணி, திமுக சார்பில் ஒரு கூட்டணி. எனவே தேர்தலில் இருமுனை போட்டிதான் நடைபெறும். தேர்தல் களத்தில் டிடிவி காணாமல் போய் விடுவார். அதிமுக கூட்டணியை உடைக்க யாருக்கும் திராணி இல்லை. சாணக்கிய தனமும் இல்லை. 7 பேர் விடுதலையில் முட்டுகட்டை போட்டு திமுகவும், காங்கிரஸும் நாடகம் ஆடி வருகின்றனர்” என தெரிவித்தார்.
Loading More post
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
சசிகலாவுக்கு கொரோனா நெகட்டிவ்
பருவநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்: அதிரடியாக பணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
சசிகலாவுக்கு லேசான மூச்சுத்திணறல்: தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்
#TopNews அமெரிக்க அதிபரான ஜோ பைடன் முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் சசிகலா வரை!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?