உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.பி.யை, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் காலணியால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் சந்த்கபிர் நகரில், பாஜக அரசின் திட்டப்பணி ஒன்றுக்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாஜக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பெயர் பட்டியல் இடம்பெற்றிருந்தது. ஆனால் இதில், அப்பகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் சிங்கின் பெயர் விடுபட்டு போனதாக தெரிகிறது.
தனது விடுபடல் தொடர்பாக ராகேஷ் சிங் கேட்க, அப்போது பாஜக எம்.பி. ஷரத் திரிபாதியுடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில் ஈடுபட்ட ராகேஷ் சிங், ஒரு கட்டத்தில் தனது காலணியை கழற்றி, எம்.பி. ஷரத் திரிபாதியை சரமாரியாக தாக்கினார். இதனையடுத்து ஷரத் திரிபாதியும் திருப்பித் தாக்கினார். எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயரதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இருவரையும் அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் தடுத்தனர்.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'