தனக்கென தனி பாணி வைத்து பல நாட்களாக திருடி வந்த ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ரவி என்பவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
டெல்லி திலக் நகரை சேர்ந்தவர் ஸ்பைடர்மேன் என்று அழைக்கப்படும் ரவி. இவர் தனக்கென்று தனி பாணியை வைத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதாவது, இவர் முதல் தளம் மற்றும் இரண்டாவது தளத்தில் உள்ள வீடுகளில் மட்டும் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். திருட செல்லும் வீட்டிற்கு வராண்டா அல்லது பால்கனியை பயன்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். திருட செல்லும்போது சிவப்பு நிற டி - சர்ட் அல்லது ஜெர்சியை பயன்படுத்தியுள்ளர்.
டெல்லியில் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில் அடிக்கடி பணம், நகை திருடப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில், டெல்லி போலீசார் ஸ்பைடர் மேன் என்று அழைக்கப்படும் ரவியை கைது செய்துள்ளனர். இதுகுறித்து டிஜிபி மோனிகா பரத்வாஜ் கூறுகையில், “நாங்கள் திருட்டு நடந்த பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில் அனைத்து தகவல்களையும் சேகரித்து குற்றவாளிகளின் பட்டியலை ஆய்வு செய்தோம். இறுதியில் புகார் அளிக்கப்பட்ட அனைத்து திருட்டுகளும் ஒரே பாணியில் இருந்ததை கண்டறிந்தோம். இதையடுத்து சுபாஷ் நகர் பசிபிக் மாலில், ஸ்பைடர் மேன் என்ற ரவியை கைது செய்தோம்.
விசாரணையில் பால்கனியில் ஏறி அறைக்குள் செல்ல வடிகால் குழாய்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. பதிவு செய்யப்பட்ட 7 திருட்டு வழக்குகளில் ரவி 6 சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் பிரிவு 380 கீழ் கீர்த்தி நகர் காவல் நிலையத்தில் இந்த 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்