மத்திய அரசு 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
இந்திய மருந்து விலை ஆணையம் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு விலையை நிர்ணயித்து வருகிறது. அத்துடன் அந்த மருந்து பொருட்களின் விலைகளையும் கட்டுப்படுத்தி வருகிறது. இதுவரை 1000 அத்தியாவசிய மருந்துவகைகளுக்கு விலை கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அந்தவகையில் இந்த ஆணையம் தற்போது 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய மருந்துக விலை ஆணையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் “மருந்துகள் விலை கட்டுப்பாடு ஆணை 2013 இல் இருக்கும் விதி 19ன்படி 42 புற்றுநோய் தடுப்பு மருந்துகளை விலை கட்டுப்பாட்டை வர்த்தக சீரமைப்பு மூலம் செய்யவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
இந்த 42 மருந்துகளையும் விலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் மூலம் மருந்துகளின் விலை 85 சதவிகிதம் குறையும் என மருந்தக விலை ஆணையம் கூறியுள்ளது. மேலும் இந்த மருந்துகளின் வர்த்தக வரம்பு 30 சதவிகிதமாக வகுக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி அமலுக்கு வரும் என மருந்தக ஆணையம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே 57 புற்றுநோய் தடுப்பு மருந்துகள் விலை கட்டுப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!