விவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பிணை இல்லாமல் வங்கிகள் வழங்கும் கடன் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடனை பிணை இல்லாமல் வழங்கலாம் எனக் கடந்த 2010ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த வரம்பு 60 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலைவாசி நிலவரம் மற்றும் முதலீட்டு பொருட்கள் விலையை கருத்தில் கொண்டு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விவசாயக் கடன் நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக ஆராய, குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) தற்போதைய 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 0.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு பிறகு ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்ததாஸ் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!