தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக அரிய வகை ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய இரு மாவட்ட வன எல்லைகளைக் கொண்டது. புலிகள் தொடங்கி சிறுத்தை, யானை, கரும்புலி, செந்நாய், மிளா வகை மான், காட்டெருமை, நரி, பன்றி என 35க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த பாலூட்டிகள் இனங்கள் இங்கு உள்ளன. தேக்கடி பெரியார் புலிகள் காப்பகமாக 1982ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த வனப்பகுதிக்குள் தற்போது முதன்முறையாக ‘குள்ள நரி’ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 9ம் தேதி, முல்லைப்பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் பகுதிக்கும், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் தேக்கடி மதகு பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த ‘குள்ள நரி’ இருப்பதை பெரியார் புலிகள் காப்பக சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர் முனைவர் பாட்ரிக் டேவிட் பார்த்துள்ளார். உடனே புலிகள் காப்பக இயற்கை கல்வியாளர் ராஜ்குமார் அதனை படமாக்கியுள்ளார். அந்தப் படத்தைக்கொண்டு, அது ‘குள்ள நரி’ என்பதும், அது கானிஸ் ஆரியஸ் என்ற வகையைச் சேர்ந்தது என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தக் குள்ள நரிகள், கடந்த 1990ம் ஆண்டு முதல் தற்போது வரை தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் நடந்த விலங்கினங்கள் கணக்கெடுப்புகள் எதிலும் பதிவாகவில்லை என்பது ஒப்புநோக்கலின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குள்ள நரியின் படங்களை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக இணை இயக்குனர் ஷில்பா வி.குமார் நேற்று வெளியிட்டுள்ளார். வழக்கமாக இரவில் மட்டுமே கூட்டமாக வெளிவரும் தன்மை கொண்டது இந்தக் குள்ள நரிகள். பகல் நேரத்தில் தனியாக வந்தது எப்படி என்பது குறித்து, கண்காணிப்பிற்கும் ஆய்விற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதி தமிழக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், தமிழக வனப்பகுதிக்குளிருந்து தனது கூட்டங்களிலிருந்து வழி தவறி வந்திருக்கலாம். அல்லது இரை தேடி வந்திருக்கலாம் என வன இணை இயக்குநர் ஷில்பா வி குமார் தெரிவித்துள்ளார். மேலும் குள்ளநரிக்கான புகைப்படங்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை