அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.
ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை மாவட்டம்தான் நினைவுக்கு வரும். உலக பிரசித்திப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னோட்டமாக நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ராகவன் குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியை கண்ணும் கருத்துமாக கண்காணித்தனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஏற்கனவே அறிவித்தது போல, எந்தக் காளைக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை. காலை 8.15க்கு ஜல்லிக்கட்டு தொடங்கியதும் வாடிவாசல் வழியாக காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக சீறிப் பாய்ந்தன. களத்தில் தயாராக இருந்த காளையர், காளைகளை அடக்கி தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றினர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 550 வீரர்களும் களமிறங்கினர். மொத்தம் 8 சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டது. சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். வாடிவாசலிலிருந்து திமிறி வந்த காளைகளை, வீறுகொண்டு அடக்கி பரிசுகளை வெல்வதில் வீரர்கள் முனைப்புக்காட்டினர். ஆர்வமிகுதியால் விதிகளை மீறிய மாடுபிடி வீரர்களை கண்காணிப்புக்குழுவினர் எச்சரித்து, நடவடிக்கை எடுத்தனர். எந்த வகையிலும், விதிமீறல்கள் அனுமதிக்கப்படவில்லை.
13 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு, மக்கள் வசதிக்காக எல்.சி.டி திரைகள் என அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முதன்முறையாக ஜல்லிக்கட்டில் களமிறங்கிய வீரர்களுக்கு இன்சூரன்ஸும் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவில் 9 காளைகளை அடக்கிய முத்துப்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்பட்டன. 7 காளைகளை அடக்கிய அறிவேல் அமுதனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சோழவபாண்டி மற்றும் காவனூர் அஜித்குமார் தலா 6 காளைகளை அடக்கினர்.
களத்தில் சிறப்பாக விளையாடிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி கோயில்மாடு சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது காளையும் சிறந்த காளை சான்றிதழைப் பெற்றது. மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் 2 காவலர்கள் ஒரு சிறுவன் உட்பட 47 பேர் காயமடைந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மணிகண்டன் மீது மாடு மோதியது. அதில் காயமடைந்த சிறுவனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம், தீயணைப்புத்துறை, காவல்துறை, தன்னார்வலர்கள், மக்கள் என அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அசம்பாவிதமின்றி உற்சாகத்தோடு நடந்து முடிந்தது.
Loading More post
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம்
“விவேக்கின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” - கண்ணீர் விட்டு அழுத வடிவேலு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி