கிருஷ்ணகிரியில் கோபத்தை தூண்டிய இளைஞரை யானை ஒன்றுவிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்குள் 80 யானைகள் தஞ்சமடைந்துள்ளன. இவற்றில் 20க்கும் அதிகமான யானைகள் உத்தனப்பள்ளி T.குருபரப்பள்ளி அருகே விளைநிலத்தில் புகுந்தன. இவற்றை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் விரட்ட முயன்றதால் யானைகள் வழிதவறி அங்கேயே சுற்றிவருகின்றன.
இந்நிலையில், அவற்றில் ஓரு யானையை இளைஞர் ஒருவர் சீண்டினார். இதனால் கோபமடைந்த யானை அந்த இளைஞரை ஆக்ரோஷத்துடன் விரட்டியது. உடனே அந்த இளைஞர் அலறிஅடித்து ஓடினர். காலால் மண்ணை கிளறியபடி கோபத்துடன் அவரைத் தொடர்ந்து விரட்டிய யானை, அங்கிருந்த மக்களை கண்டதும் மேலும் கோபமானது. பின்னர் அங்கிருந்த பொதுமக்களையும் விரட்டத் தொடங்கியது. யானைகளை சீண்டிவிடும் இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்கின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
ராமர் பாலம் எப்போது, எப்படி உருவானது? - கடலுக்கடியில் ஆய்வு செய்ய மத்திய அரசு ஒப்புதல்!
திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு : மு.க.ஸ்டாலின்
சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல் முயற்சி: இந்திய ராணுவம் முறியடிப்பு
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!