டாஸ்மாக் கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதம் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மேலகத்தூர் மற்றும் நடுவிக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கையில் தாலியோடு தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதால், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாகவும், மதுக்கடைகளை அகற்றாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள காக்காதோப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் 3வது நாளாக செண்டை மேளம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டது. இக்கடையை அருகில் உள்ள தேளூர் ஊராட்சிக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்க எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், 200க்கும் மேற்பட்டோர் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஜெயங்கொண்டம் அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி