அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளிக்க இருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பில் இருந்து வெளியேறுவதாகவும், அடுத்த ஆண்டு ஜூலை மாதம் முதல் வர்த்தக ரீதியிலான திமிங்கல வேட்டைக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் ஜப்பான் அரசு கூறியுள்ளது. ஜப்பானின் கடல் எல்லை பகுதியில் மட்டும் திமிங்கல் வேட்டைக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பில் இருந்து வெளியேறுவதன் மூலம் அண்டார்டிகா கடல் பகுதியில், ஜப்பான் திமிங்கல வேட்டையில் ஈடுபட முடியாது.
Read Also -> வங்கதேச தேர்தலையொட்டி 10 ஆயிரம் பேர் கைது
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வறுமையில் சிக்கிய ஜப்பான் மக்களுக்கு திமிங்கல வேட்டை முக்கிய பணியாக மாறியது. திமிங்கலத்தை உண்ணும் பழக்கமும் உருவானது. ஆனால் காலப்போக்கில் இது மறைந்தாலும் திமிங்கல வேட்டை தொடர்ந்து நீடிக்கிறது.
Read Also -> 4 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிய கேஜிஎஃப்
இதனால் அரிய வகை திமிங்கலங்கள் அழிந்து வருவதாக கூறி சர்வதேச திமிங்கல வேட்டைக்கான ஒழுங்குமுறை அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் ஜப்பான் தற்போது அந்த அமைப்பில் இருந்தே வெளியேறுகிறது.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!