கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது
என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
வீடுகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி தொடர்பான தகவல்களை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் கட்டுமானப்
பணிகள் நிறைவுபெற்றதற்கான சான்று பெறப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படாது என
கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுமானப் பணி தொடங்கும்போதோ, கட்டுமானம் முடிந்து நிறைவுச் சான்று பெறப்படாமலோ
உள்ள வீடுகளை வாங்கினால் ஜிஎஸ்டி பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு வீடு திட்டம், ராஜிவ் ஆவாஸ் யோஜனா, பிரதமரின் வீடு கட்டும்
திட்டம் ஆகியவற்றின் கீழ் கட்டப்படும் குறைந்தவிலை வீடுகளுக்கான 8 சதவிகித ஜிஎஸ்டியை, கட்டுமான நிறுவனங்கள்
தங்களது வரி வரவில் இருந்து கழித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறும் பலனை வாடிக்கையாளருக்கு வழங்குவதன் மூலம் அவர்களது சுமையைக் குறைக்கவும் நிதி அமைச்சம்
கட்டுமான நிறுவனங்களை வலியுறுத்தியுள்ளது.
Loading More post
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
சட்டப்பேரவைத் தேர்தல்: உதய சூரியன் சின்னம் எத்தனை இடங்களில் போட்டி?
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!