முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக, திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைமையில் அதிமுக அரசை கண்டித்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை அவதூறாக பேசியதாக, வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் பெரம்பலூர் நகர காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நெடுஞ்சாலை ஒப்பந்த புகார் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஆ.ராசா கூறியது குறிப்பிடத்தக்கது.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி