நிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்கலாம்..! மீறினால் பெற்றோர்களுக்கே சொத்து..!

நிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்கலாம்..! மீறினால் பெற்றோர்களுக்கே சொத்து..!
நிபந்தனையுடன் பிள்ளைகளுக்கு சொத்தை கொடுக்கலாம்..! மீறினால் பெற்றோர்களுக்கே சொத்து..!

பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைக்கும் போது பெற்றோர் நிபந்தனைகளுடன் சொத்தை பதிவு செய்யலாம் என பதிவுத்துறை அலுவல‌கங்களுக்கு அனுப்பி‌வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் திருவண்ணாமலையில் நிலத்தை எழுதி வாங்கி கொண்டு பெற்றோருக்கு உணவு கூட அளிக்காமல் தவிக்க விட்ட மகன்களிடம் இருந்து சொத்தை மீட்டு மீண்டும் பெற்றோரிடமே ஒப்படைத்தார் அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி. அத்துடன் மகன்கள் ஏதேனும் பிரச்னை செய்தால் உடனே தெரிவிக்குமாறு பெற்றோரிடம் கூறிய ஆட்சியர் கந்தசாமி வயது முதிர்ந்த காலத்தில் பெற்றோரை பாதுகாப்பது மகன்களின் கடமை, பெற்றோரை தவிக்க விட்ட மகன்களுக்கு இது ஒரு பாடமாக அமையவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் பிள்ளைகளுக்கு சொத்துகளை எழுதி வைக்கும் போது பெற்றோர் நிபந்தனைகளுடன் சொத்தை பதிவு செய்யலாம் என பதிவுத்துறை அலுவல‌கங்களுக்கு அனுப்பி‌வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரிடம் சொத்துக்களை எழுதி வாங்கும் பிள்ளைகள் அவர்களை முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகிறது.

இந்த சூழலில் பத்திர பதிவுத்துறை அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பிள்ளைகளுக்கு‌ சொத்துக்களை எழுதி வைக்கும் போது, தங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்து பெற்றோர் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் நிபந்தனைகளை பின்பற்றவில்லை எனில் சொத்து பதிவையே திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் பதிவுத்துறை சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com