கஜா புயல் நிவாரணப் பணிகள் வழங்க நாகை சென்ற போது மாரடைப்பால் உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவறும்பூர் மலைக்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி ஒரு வாரத்திற்கு முன்பு நாகராஜ் பணிக்காக திருவாரூர் வந்துள்ளார். அப்போது பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அமைச்சர்கள் காமராஜ், சரோஜா உள்ளிட்டோர் நாகராஜ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், உயிரிழந்த நாகராஜ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?