புதுச்சேரியில் கஜா புயலால் கடலில் அடித்து வரப்பட்ட மர்ம பொருள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கஜா புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை கடுமையாக தாக்கியது. இந்த தாக்குதலில் லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன. டெல்டா மாவட்ட மக்கள் இதில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். உணவு, உடை மற்றும் இருப்பிடமின்றி அவர்கள் தவித்து வருகின்றனர். இந்த புயலால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் நூற்றுக்கணக்கான கால்நடைகள் மற்றும் வனவிலங்குகள் இறந்துள்ளன. கடலோர மாவட்டங்களில் விலங்குகள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் மர்மப் பொருள் ஒன்று கஜா புயலால் கரை ஒதுங்கியுள்ளது. புதுச்சேரி காலாப்பேட் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த உருளை வடிவிலான பொருளை மீனவர்கள் கரைக்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து கடலோரக் காவல்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கப்பல் செல்ல வழிகாட்டியாக பயன்படும் போயோ மோரிங் என்ற உருளையாக இருக்கக் கூடும் என்பது சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அந்த பொருள் என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை.
Loading More post
அரசு அறிவிக்க உள்ளவற்றை ஸ்டாலின் முன்கூட்டியே தெரிந்துகொள்கிறார் - முதல்வர்
பாஜகவில் இணைந்த ரவுடிகள் என பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்
தா.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்களின் நினைவலைகள்
வாட் வரி 2% குறைப்பு: புதுச்சேரியில் குறைகிறது பெட்ரோல், டீசல் விலை!
வீரன் பொல்லாலனுக்கு மணிமண்டபம்: தமிழக அரசு அறிவிப்பு
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்