தமிழகத்தில் நிலவும் சிறப்பான சூழலை முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டு புதிய தொழில்களைத் தொடங்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
முதலீட்டாளர்களை வரவேற்கும் விதமாக, புதிய நிதி ஏற்பாட்டிற்கான வட்டமேசை மாநாடு சென்னை கிண்டியில் நடைபெற்றது. துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடங்கி வைத்த இம்மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் சம்பத், ஐக்கிய பொருளாதார மன்றங்களின் தலைவர் ஆரிப் புஹாரி மற்றும் இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் தலைவர் டூ மூசா ஹிடேம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய துணை முதலமைச்சர், மலேசிய தொழிற் நிறுவனங்களுடன் சிறந்த பொருளாதார, வர்த்தக உறவை தமிழகம் பேணி வருதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் புதிய தொழிலைத் தொடங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான வசதிகளை சிறப்பான முறையில் ஏற்படுத்தித் தருவதாகவும் தெரிவித்தார். இதனைப் பயன்படுத்தி புதிய தொழில்களைத் தொடங்கி வளர்ச்சியடைய முதலீட்டாளர்களை வரவேற்பதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார்.
Loading More post
"மருத்துவர் சாந்தா எனக்கு தாய் போன்றவர்"- சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
“ஸ்டாலின் முதலமைச்சராக வர முடியாது” - அமைச்சர் கே.பி அன்பழகன்
டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி இன்று சந்திப்பு
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?