இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சி இன்றி நாடாளுமன்றத்தை சிறிசேன கலைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் தமிழர்களின் வாழ்வுக்கு சிறிசேன அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் ஜனநாயக விரோத செயல்களை தொடக்கம் முதலே மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்ப தாக அவர் கூறியுள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டு காணாமல் இருப்பதைக் கண்டு உலகத்தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை