கேரளாவில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், தமிழக -கேரளா எல்லையில் உள்ள செங்கோட்டையில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்க ளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று கோயிலுக்குச் சென்ற பெண்கள் வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்களை தடுக்கும் வகையில் சபரிமலைக்குச் செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். நிலக்கல்லில் சபரிமலைக்கு வரும் பெண்களின் கால்களில் விழுந்து கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கலைப்பது மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பலத்த பாதுகாப்புடன் பெண்களை அழைத்துசெல்ல காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க சபரிமலை செல்லும் வழிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு ள்ளனர்.
இந்நிலையில் சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர் கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக் காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட் டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தினால் நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப் பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு சபரிமலை கோவில் பாதுகாப்பு குழு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி முழு அடைப்பு நடந்து வருகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதியில் அரசு பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப் பட்டது.
இதன் காரணமாக தமிழக-கேரளா எல்லையில் தமிழகத்திற்கு உட்பட்ட செங்கோட்டை பகுதியில் தமிழக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து கோவிலுக்கு வரும் வாகனங்கள் செங்கோட்டை யில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்புவதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கேரளாவுக்குள் லாரிகளும் அனுமதிக்கப்படவில்லை என்பதால் சாலையில் ஏராளமான லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன.
Loading More post
ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
மேற்கு வங்க தேர்தல் வன்முறையில் 5 பேர் சுட்டுக் கொலை - கலவரத்திற்கு காரணம் யார்?
தென்மாவட்டங்களின் சில இடங்களில் திடீரென இரவில் கொட்டித் தீர்த்த கனமழை!
இன்று முதல் 4 நாட்களுக்கு தடுப்பூசி திருவிழா: தமிழகத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் இலக்கு!
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!