தேமுதிக பொதுச்செயலளார் விஜயகாந்த் வீட்டிலிருந்து 2 பசுமாடுகள் திருடப்பட்டுள்ளது.
விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னை, ஐயப்பன் தாங்கலை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் அவ்வீட்டின் பாதுகாப்பு பணியில் இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக வீடு கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த வீட்டில் விஜயகாந்தின் 3 மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு 3 மாடுகளும் இருந்த நிலையில், இன்று காலையில் எழுந்து பார்த்தபோது 2 மாடுகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாவலர்கள் மாடுகளை தேடினர். எங்கு தேடியும் மாடுகள் கிடைக்கவில்லை என்பதால், பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாடுகள் காணாமல் போனது தொடர்பாக விசாரணை செய்தனர். மாடுகள் அதுவாக வழிதவறிச் சென்றுவிட்டனவா? அல்லது யாரேனும் மாடுகளை திருடிச்சென்றனரா? என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
Loading More post
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு