ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதாலேயே அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இது தொடர்பாக நாடாளுமன்றமே சட்டம் இயற்ற முடியும் என கூறியுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அதில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலே தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க முடியாது. அப்படி தடை விதிக்கும் இடத்தில் நாங்கள் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தாங்களாகவே அடிப்படை நாகரீகத்தை கடைபிடித்து, குற்றப்பின்னணி உடையவர்களை தேர்தலில் நிறுத்த கூடாது என தெரிவித்தனர்.
அரசியலில் ஊழலும், முறைகேடுகளும் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து வருவது வேதனை அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். நாடாளுமன்றம் சட்டமியற்றி, அதன் மூலம் குற்றப்பின்னணி உடையவர்கள் பொதுவாழ்வுக்கு வராததை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார். தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
Loading More post
"கடந்த ஆண்டைபோல கொரோனாவை ஒழிப்போம்" - பிரதமர் மோடி
கொரோனா கட்டுப்பாடுகள்: முதலமைச்சர் இன்று ஆலோசனை!
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி