சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் நடைமுறை

சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் நடைமுறை

சார் பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன் நடைமுறை

சார்பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை முதல் டோக்கன் நடைமுறை அமலுக்கு வருவதாக பதிவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் கூட்டத்தையும், ஒழுங்கற்ற சூழலை ஒழுங்குப்படுத்தவும், ஆவணங்கள் முன்பதிவு செய்யவும் டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 51 சார்பதிவாளர் அலுவலகங்களில் அண்மையில் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து அலுவலகங்களிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 30 டோக்கன்களும், மதியம் ஒரு மணி முதல் 3.30 மணி வரை 20 டோக்கன்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com