நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டினால், அந்த இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வரும் 10 பேருக்கு, அரசு திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா வழங்க அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், 60 ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு, மின் இணைப்பு, குடும்ப அட்டை என அங்கீகரிக்கப்பட்ட அரசு ஆவணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு தாங்கள் வசித்து வரும் இடத்திலேயே தங்களுக்கு பட்டா வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டுமென மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சுட்டிக்காட்டிய நீதிபதி, நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளுக்கு இலவச பட்டா வழங்க உத்தரவிட முடியாது என தெரிவித்தார். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற 8 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து 12 வாரங்களுக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?