கோவை பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
கோவையை அடுத்த துடியலூர் பகுதி சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று உள்ளார். அப்போது அதே பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், அந்தப் பெண்ணின் நகையை பறிக்க முயன்று உள்ளார். உடனடியாக, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஒன்று கூடி அடித்து உள்ளனர்.
அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. பின்னர் அந்த நபரின் இரு கைகளையும் கட்டி வைத்து , காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீஸார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் பெருமாநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்