சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் விவகாரத்தால் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன்-மகேஸ்வரி தம்பதியின் மகள் சுஸ்மிதா. சேலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் சுஸ்மிதாவும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து காணப்பட்ட சுஸ்மிதா, இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் சரக்கப்பிள்ளையூர் பகுதியில் உள்ள கிணற்றில் பெண் சடலம் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கிணற்றில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டனர். இறந்தவர் காணாமல் போன இளம்பெண் சுஸ்மிதா என தெரியவந்தது.
You can also watch :
Loading More post
மார்ச் 7-ல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்: சீமான் அறிவிப்பு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?