நேபாளத்துக்கு ஆன்மீகச் சுற்றுலா சென்ற 200 இந்தியர்கள் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
நேபாளத்தின் சிமிகாட் என்ற இடத்துக்கு இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தற்போது கனமழை பெய்து வருவதால், மோசமான வானிலை நிலவி வருகிறது. அத்துடன் விமானம் இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்ப முடியாமல் 200 இந்தியர் சிக்கித்தவிக்கின்றனர்.
சுற்றுலா வந்த இந்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், வானிலை சீரானவுடன் அனைவரும் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
புதுச்சேரியில் தனித்து நிற்கவும் தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஜன.27இல் சசிகலா விடுதலையாவது உறுதி! 22 ஆம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் அறிவிப்பு
கொரோனா பாதிப்பு: தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்!
மருத்துவர் சாந்தாவுக்கு செவிலியர்கள் பிரியாவிடை! இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்பு
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி