நாமக்கல் அருகே தனது இரு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த காவக்காரன் பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால். வெங்காய வியாபாரம் செய்து வரும் இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் சசிகலா என்பவருடன் திருமணமாகி வீரபத்ரன் (7) என்ற மகனும், விஜயா (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சசிகலா உடல்நிலை குறைவால் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் வேறு திருமணம் செய்து கொள்ளாமல் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். தனது மனைவி இறந்த துக்கத்திலிருந்து மீளாத ராஜகோபால் தனிமை விரும்பியாக இருந்து வந்த நிலையில் இன்று தன் தோட்டம் அருகே உள்ள வேப்பம் மரத்தில் தனது இரு குழந்தைகளுடன் தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் எருமப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி 3 சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராஜகோபால் தனது இரு குழந்தைகளையும் காப்பாற்றி வந்துள்ளார். எனினும் அவர்களை தாயில்லாமல் முறையாக பராமரிப்பு செய்ய இயலாததால், தனது இரு குழந்தைகளையும் மரத்தில் கயிற்றால் தூக்கு மாட்டிதொங்க விட்டு, பின்னர் அவரும் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. தனது இரு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட்து அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை