காவல்துறை உதவி ஆணையராக பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‘பொன் மாணிக்கவேல்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக செயல்பட்டவர் ஐஜி பொன் மாணிக்கவேல். சிலை கடத்தல் வழக்கு மட்டும் அல்லாது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் புகழ்பெற்றவர். இந்நிலையில் பிரபுதேவா காவல்துறை உதவி ஆணையராக நடிக்கும் ஒரு படத்துக்கு ‘பொன் மாணிக்கவேல்’என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ‘பாகுபலி’யில் காளகேய ராஜாவாக நடித்த பிரபாகரும் நடிக்கிறார். படத்தை ஏ.சி.முகில் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “என் சொந்த ஊரான சேலத்தில் பொன் மாணிக்கவேல் சில காலம் பணியாற்றினார். அவரின் நடவடிக்கையில் ஈர்க்கப்பட்டு எடுக்கப்பட்ட கதைதான் இது. அதனாலேயே தலைப்பும் இவ்வாறு உள்ளது” என தெரிவித்தார்.
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!