உலக அளவில் இந்தியர்கள் வேலை பளு மற்றும் கடன் சுமை பிரச்னைகளால் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. அந்த ஆய்வின்படி பிரேசில், இந்தோனிஷியா உள்ளிட்ட வளரும் நாடுகள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா ஆகிய வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களைக் காட்டிலும் இந்தியர்கள் அதிகம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த சிக்னா என்ற சுகாதார சேவை அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டோரில் 89 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக அளவிலான சராசரி 86 சதவீதத்தை காட்டிலும் அதிகம் ஆகும். ‘Well-Being Survey’ எனப்படும் இந்த ஆய்வில் உடல்நிலை, குடும்பம், சமூகம், பொருளாதாரம் மற்றும் பணிச் சூழல் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட்டன.
சிக்னா நிறுவனம் கடந்த பிப்ரவரி முதல் மார்ச் மாதம் வரை 23 நாடுகளைச் சேர்ந்த 14,467 பேரிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 20 நகரங்களைச் சேர்ந்த 1000 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வைப் பொறுத்தவரை மற்றவர்களைக் காட்டிலும் 18 முதல் 34 வயது உடையவர்களே அதிக மன அழுத்தம் அடைகின்றனர்.
ஆய்வில் பங்கெடுத்த 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்றும் தங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் போதிய நேரம் ஒதுக்கிட முடியவில்லை என்றும் கூறியுள்ளனர். குடும்பங்களை பொறுத்தவரை தங்களது பெற்றோர்களுக்கோ, குழந்தைகளுக்கோ போதிய பணம் செலவிட முடியாமல் திணறி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
ஐபிஎல் 2021 அட்டவணை வெளியீடு: முதல் போட்டியில் மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!