நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தில் உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகள், பருத்தி போன்ற 14 வகை கோடை கால அறுவடை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் தரப்பட்டது. இதன்படி சாதாரண ரக நெல்லுக்கான ஆதார விலை 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1,750 ரூபாய் ஆக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விவசாயிகள் தாங்கள் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை செயலாக்கும் வகையில் மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு மூலம் அரசின் உணவு மானிய செலவுகள் 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!