மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையான கொடூரம்

மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையான கொடூரம்
மகளின் பாலியல் வன்கொடுமைக்கு தாயே உடந்தையான கொடூரம்

விழுப்புரத்தில் தகாத உறவு கொண்ட பெண்ணுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பகுதி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் தணிகைவேல் (32). இன்னும் திருமணமாகாத இவர், பட்டதாரி ஆசிரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் மாணவ-மாணவிகளுக்கு டியூசன் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தெளி கிராமத்தை சேர்ந்த மல்லிகா (31) என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. மல்லிகாவிற்கு அந்தோணிராஜ் என்ற கணவரும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகன் டியூசன் செல்வது தொடர்பாக விவகாரத்தில் தான் தணிகைவேலுக்கும், மல்லிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது.

இந்த விஷயம் கணவர் அந்தோணிராஜுக்கு தெரியவர, மனைவி மல்லிகாவை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் பலமுறை கண்டித்தும் மல்லிகாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்தோணிராஜ் தனது மூத்த மகனை மட்டும் அழைத்துக்கொண்டு தனியே சென்றுவிட்டார். இதன்பின்னர் மல்லிகா தனது இரண்டாவது மகன் மற்றும் 4 வயது மகளுடன் வளவனூர் சென்று, தணிகைவேலுடன் தகாத முறையில் வாழ்ந்து வந்துள்ளார். தணிகைவேலுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த தணிகைவேல், மல்லிகாவின் 4 மகளான அந்தக் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

அங்கிருந்த மல்லிகா, தணிகைவேலை தடுக்காமல் இரக்கமற்ற தன்மையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது குழந்தை கூச்சலிட, சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் வந்து நடந்த கொடுமையை பார்த்ததும், தணிகைவேலை பிடித்து தாக்க முயன்றுள்ளனர். அதற்குள் கொடூர எண்ணம் கொண்ட தணிகைவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அக்கம்பத்தினர் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்துடன் சிறுமியை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் மல்லிகா மற்றும் தணிகைவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் பதுங்கியிருந்த தணிகைவேலை கைது செய்து, மல்லிகாவை தேடி வருகின்றனர். தாய் கண் முன்னே தகாத உறவால் குழந்தைக்கு ஏற்பட்ட இந்தக் கொடுமை அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com