இனி அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை உலக கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆம், ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நாளை தொடங்குகிறது உலகக் கோப்பை காலபந்துப் போட்டிகள். தொடக்க விழாவுக்காக மாஸ்கோ நகரின் லூசினிக்கி விளையாட்டுத் திடல் மின்னொளியில் ஜொலித்து வருகிறது. பிரபல இசை மற்றும் நடனக் கலைஞர்கள் தொடக்க விழாவில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மாஸ்கோவில் குவிந்துள்ளனர்.
2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 நாடுகளின் அணிகள் கலந்துக்கொள்கின்றன. இந்தப் போட்டிகள் ஜூன் 14 முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 11 நகரங்களில் 12 மைதானங்களில் 64 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மொத்தம் ரூ.87 ஆயிரம் கோடி செலவில் உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள், விளையாட்டு மைதான வசதிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ரஷ்ய அரசு செய்துள்ளது. உலகம் முழுவதும் இருந்து 1 கோடி ரசிகர்கள இதற்காக பயணம் மேற்கொள்வர் என கணிக்கப்பட்டுள்ளது.இந்திய நேரப்படி நாளை மாலை 6.30 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. கால்பந்து உலக்கோப்பை முதல் ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் மோதுகின்றன.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?