சண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்

சண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்
சண்டைக்கார கெளதமும் சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள்

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா ஒரு படம் நடிப்பது உறுதியாகியுள்ளது.   
 

காதல் கதைகளில் கெளதம் மேனன் திரைப்படங்களுக்கு தனி ஸ்டைல் உண்டு. அவருக்கு என்றே தனி ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளனர். சூர்யாவும் இவரும் இணைந்து பணிபுரிந்த ‘காக்க காக்கா’ திரைப்படம் அஃமார்க் அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. வசூல் அளவில் பெரிய வெற்றியை இந்தப் படம் அடைந்தது. இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைந்து பணிபுரிவார்கள் என பலரும் எதிர்பார்த்து வந்தனர். மீண்டும் ‘வாரணம் ஆயிரம்’ மூலம் இணைந்தனர். அந்தப் படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக அமைந்தது.

இதனை அடுத்து சூர்யாவிற்கு கெளதம் ஒரு கதை கூறியிருந்தார். ஆனால் அந்தக் கதை சரியில்லை என சூர்யா தெரிவிக்க, இருவருக்கும் கருத்து முரண்பாடு எழுந்தது. அதனையடுத்து கெளதம் மேனனை அழைத்து அஜித் ஒரு பட வாய்ப்பை தந்தார். தக்க சமயத்தில் தனக்கு உதவியதாக அஜித்தை புகழ்ந்து பேசினார் கெளதம். இதனால் சூர்யா-கெளதம் இடையே உருவான மோதல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பின் நடந்த சந்திப்பில் சூர்யாவும் கெளதமும் சமரசமானார்கள். ஆகவே சூர்யாவை சந்தித்து கெளதம் மீண்டும் ஒரு கதையை கூறியிருந்தார். அந்தக் கதை அவருக்கு பிடித்து போகவே சூர்யா நடிக்க சம்மதித்துள்ளார். இந்த ஆண்டு கெளதம் இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com