மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயை பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை 11.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காகவே வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சுமார் 50 நிமிடங்கள் வரை அவர் மருத்துவமனையில் இருந்தார். மருத்துவர்களிடம் வாஜ்பாயின் உடல் நலம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். வாஜ்பாயின் உடல்நலம் குறித்து அவரது உறவினர்களிடமும் உரையாடினார் மோடி. பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் வாஜ்பாயை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாயை சந்தித்தார்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?