‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்

‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்
‘காலா’ ஜீப்பை வாங்கிய மகேந்திரா நிறுவன தலைவர்

‘காலா’ படத்தில் பயன்படுத்தப்பட்ட மகேந்திரா ஜீப்பை அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மகேந்திரா நிறுவனத்தின் வாகனங்களை சிறப்பிக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்குவிக்கும் பணியில் ஆனந்த் மகேந்திரா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஒருமுறை கேரளாவில் ஆட்டோ ஒன்றை மகேந்திரா கார் போல் வடிவமைத்தவரை கண்டறிந்து, அவருக்கு புதிய நான்கு சக்கர வாகனம் ஒன்றை வழங்கினார். அத்துடன் அவர் மகேந்திரா கார் போல் வடிவமைத்திருந்த காரை நினைவாக பெற்றுக்கொண்டார். அத்துடன் மகேந்திரா காரின் மூலம் உணவகம் நடத்தி வந்த பெண்ணை கண்டுபிடித்து, அவருக்கு புதிய கார் ஒன்றை வழங்கினார். 

இந்நிலையில் ‘காலா’ படத்தில் பயன்படுத்தப்பட்ட காரை கண்டுபிடித்து அதை ஆனந்த் மகேந்திரா வாங்கியுள்ளார். அத்துடன் தனது நிறுவனத்தின் ஊழியர்களை ‘காலா’ரஜினிகாந்த் போல வேடமணிந்து, அந்த ஜீப்பில் அமர்ந்து புகைப்படம் எடுக்க வைத்துள்ளார். அந்தப் புகைப்படங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். மகேந்திரா வாகனங்களை பிரபலமடையச்செய்யும் விதமாகவும், பெருமைபடுத்தும் விதமாகவும் அவர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com