ஆந்திர காவல்நிலையத்தில் தமிழக இளைஞர் உயிரிழப்பு

ஆந்திர காவல்நிலையத்தில் தமிழக இளைஞர் உயிரிழப்பு
ஆந்திர காவல்நிலையத்தில் தமிழக இளைஞர் உயிரிழப்பு

ஆந்திராவில் கைது செய்யப்பட்ட தமிழக இளைஞர் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே தென்னேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக தமிழகத்தை சேர்ந்த 9 பேரை சத்தியவேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ராஜா என்பவர் காவல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார். உடற்கூறு ஆய்விற்காக சத்தியவேடு அரசு மருத்துவ மனையில் தற்போது ராஜாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இரவு ராஜாவுக்கு வலிப்பு வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 

உயிரிழந்த ராஜா, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரை சேர்ந்தவர். ஆந்திர காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தமிழக இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com