திருவள்ளூரில் மின்னலை செல்போனில் படம் பிடித்தவர் கதிர்வீச்சின் ஈர்ப்பில் மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வாட்டி வந்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானிலை மாற்றம் அடைந்து, மாலையில் மழை பெய்தது. புழல், செங்குன்றம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்தக் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது.
சென்னை திருவான்மியூரை சேர்ந்த ரமேஷ், துரைப்பாக்கத்தில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். கனமழை பெய்யும் நேரத்தில் இவர், தனது நண்பர்களுடன் சுண்ணாம்பு குளம் பகுதியில் இறால் பண்ணையை பார்வையிட சென்றுள்ளார். அப்போது, அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. மின்னலை கண்ட ரமேஷ், அதை தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
அப்போது செல்போனின் கதிர்வீச்சால் இழுக்கப்பட்ட மின்னல், ரமேஷின் முகம் மற்றும் மார்பில் தாக்கியுள்ளது. இதில் கருகியதும், பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆரம்பாக்கம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, ரமேஷ் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் அவரது உடலை உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
சுவிட்சர்லாந்து பேட்மிண்டன் ஓபன்: இந்தியாவின் சிந்து காலிறுதிக்கு தகுதி!
இந்தியாவில் அமைதியாக வாழத் தகுதியான நகரங்களில் சென்னை, கோவை இடம்பிடிப்பு!
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை