கூடலூர் அருகே ஊருக்குள் நுழைந்து கீழே விழுந்து எழுந்திருக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்த பெண் யானை இறந்தது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி படச்சேரி பகுதியில் பெண் யானை ஒன்று நேற்றிரவு ஊருக்குள் புகுந்தது. குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒரு பகுதிக்கு சென்ற யானை அங்கு சுவர் ஒன்றை உடைத்துக்கொண்டு சரிவான பகுதியில் கீழே விழுந்தது. இதில் வாயில் படுகாயம் ஏற்பட்டது. விழுந்த யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் யானையை தூக்கி நிறுத்த முயற்சிகள் மேற்கொண்டனர். இந்த முயற்சி பலனளிக்காததால் யானை இறந்தது. இந்த யானை கடந்த வாரம் சேரம்பட்டி பகுதியில் மூதாட்டி ஒருவரை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்