ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டதாகவும், இனிமேல் திறக்கப்படாது என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. பொதுமக்களின் உணர்வுகளுக்கும் கருத்துக்களுக்கும் மதிப்பு அளித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிடப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்ற தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அதற்கு சீல் வைத்தார். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக நோட்டீஸும், ஆலையின் கதவில் ஒட்டப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் பேசிய ஆட்சியர் சந்தீப், “தூத்துக்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தமிழக முதலமைச்சர் தலைமையிலான அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆலையை சீல் வைத்து மூடியுள்ளோம். நிரந்தரமாக ஆலை மூடப்பட்டுள்ளது. இனிமேல் ஆலைக்குள் எந்தவித உற்பத்தியும் நடைபெறாது. ஏற்கனவே தண்ணீர், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் தேதி முதல் ஆலை செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் தான் இனி ஆலை இயங்க முடியாத படி நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. உள்ளே சில ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் அடுத்து என்ன செய்யவேண்டும் என நாங்கள் கூறுவோம். இனிமேல் தூத்துக்குடியில் அமைதி திரும்புவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
Loading More post
"3 வேளாண் சட்டங்களை அனைத்து விவசாயிகளும் புரிந்து கொண்டால் நாடே பற்றி எரியும்”- ராகுல்
'அதிகாரிகள் அலட்சியம்'- 10 ஆண்டுக்குப் பின் நிரம்பிய ஏரி உடைந்து 100 ஏக்கர் பயிர்கள் நாசம்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
“சீரியல்களில் நடிப்பதை குறைத்து இனி சரத்குமாருடன் முழு அரசியலில் ஈடுபடுவேன்”: ராதிகா
“மைனர் பெண்ணின் கையை பிடித்ததாலேயே ஒருவர் மீது போக்சோ பாயாது”- மும்பை உயர்நீதிமன்ற கிளை
ஆடைமீது தொட்டால் பாலியல் தொல்லை இல்லையா? - 'போக்சோ'வும் சர்ச்சைத் தீர்ப்பும்... ஒரு பார்வை
இணைப்பு முதல் ஓய்வு வரை... சசிகலாவுக்கு முன்னே 6 'வாய்ப்புகள்' - அடுத்து என்ன?
அதிரவைத்த இரட்டை கொலை, நகை கொள்ளை: டைம் டூ டைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை; நடந்தது என்ன?
டெல்லி டிராக்டர் பேரணி... வன்முறையைத் தடுக்க 'தவறிய' காரணங்கள்!