தமிழகத்திலேயே முதன்முறையாக கோவையில் காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் காவலர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.கோவை ரயில் நிலையம் அருகே உள்ள 140 ஆண்டுகள் பழமையான ஹாமில்டன் கிளப் கட்டடத்தை சீரமைத்து தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு காலகட்டங்களில் ராணுவம் மற்றும் காவல்துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள், இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். காவலர் அருங்காட்சியத்தை பார்வையிடும் மாணவர்களின் திறன் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி அதிகாலையில் புறப்படும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
Loading More post
“மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரைக்கு அனுமதி இல்லை!” - தேர்தல் ஆணையம்
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை