போதிய மழை இல்லாத காரணத்தால் காவிரியில் தண்ணீர் திறக்க இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிந்த பின்பும் வாரியம் அமைக்கப்படவில்லை. இதுகுறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. கடந்த விசாரணையின்போது, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் கர்நாடக அரசு மீது கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட இயலாது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு கூறியுள்ளது.
போதிய மழை இல்லாததால் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த இயலாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் வரை தமிழகத்திற்கு 116.7 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டதைவிட கூடுதலாக 16.66 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம். அதனால் கூடுதலாக தண்ணீர் தர முடியாது என்றும் கூறியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!