சசிகலாவை தவிர வேறு யாரும் ஜெயலலிதாவை அப்போலோவில் பார்க்கவில்லை என்று திவாகரன் கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா சகோதரர் திவாகரன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். 4 மணி நேரத்துக்கும் மேலாக திவாகரனிடம் விசாரணை நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் திவாகரன் பேசுகையில், “ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து என்னிடம் கேட்டார்கள், நான் விளக்கம் அளித்துள்ளேன். ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே இறந்து விட்டதாக தகவல் வந்தது. அதைதான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் கூறினேன். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை. அப்போலோவிற்கு 2 முறை சென்றும் ஜெயலலிதாவை உயிருடன் பார்க்க முடியவில்லை; இறந்தபின்பே பார்த்தேன்” என்று கூறினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து இருவேறு கருத்துக்களை திவாகரன் சொல்லியிருந்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
Loading More post
''எந்தக் கட்சியிலும் சேரலாம் என ரஜினி கூறியதே போதும்'' - கமல்ஹாசன்
புதுச்சேரி: நமச்சிவாயம் உட்பட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா!
புதுச்சேரி: காங்கிரசில் இருந்து அமைச்சர் நமச்சிவாயம் தற்காலிக நீக்கம்!
கண்ணை மறைத்த மூடநம்பிக்கை: இரு மகள்களை நிர்வாணப்படுத்தி நரபலி பூஜை செய்த பெற்றோர்!
“சீனா என்ற வார்த்தையை சொல்லக்கூட தைரியமற்றவர் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி
PT Exclusive: சசிகலாவிற்கு 100% இடமில்லையென கூறியது ஏன்? - நேர்காணலில் முதல்வர் விளக்கம்
PT Exclusive: ''களத்தில் இருப்பது அதிமுகவும், திமுகவும்தான்''- முதல்வர் பழனிசாமி நேர்காணல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!