பள்ளி மாணவி 4 மாதம் கர்ப்பம்: தாயே தவறுக்கு காரணமான கொடுமை

பள்ளி மாணவி 4 மாதம் கர்ப்பம்: தாயே தவறுக்கு காரணமான கொடுமை

பள்ளி மாணவி 4 மாதம் கர்ப்பம்: தாயே தவறுக்கு காரணமான கொடுமை

சென்னை அடுத்த ஆவடி அருகே 12 வயது பள்ளி மாணவி 4 மாதம் கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநின்றவூர் நெமிலிச்சேரி பகுதியில் கடை வைத்திருப்பவர் ரேணுகா தேவி. அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரமசிவம்(48) என்பருக்கும் ரேணுகா தேவிக்கும் இடையே தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் பழக்கத்தின் மூலம் ரேணுகா தேவியின் மகளிடம் பரமசிவம் நெருங்கி பழகியதாக தெரிகிறது. இதனால் அவரது மகள் கர்ப்பமாகியுள்ளார்.

ரேணுகாவின் மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு பயின்று வருகிறாள். அந்தச் சிறுமிக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ரேணுகா சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பரிசோதனையின் போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளது தெரிந்து அதிர்ச்சியடந்தனர். இதனிடையே கர்ப்பத்திற்கான காரணம் யார் என தெரியாத நிலையில் கர்ப்பத்தைக் கலைக்க முடிவு செய்துள்ளார். அதற்காக தன்னுடைய மகளை சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு ரேணுகா தேவி அழைத்துச் சென்றுள்ளார். முதலில் மருத்துவர்களிடம் மகளின் வயது 18 என அவர் கூறியுள்ளார். பின்னர் மருத்துவர்கள் கண்டிப்புடன் கேட்க, பள்ளி மாணவியான தன்னுடைய மகளுக்கு இவ்வாறு நேர்ந்துள்ளது. யாருக்கும் தெரியாமல் கலைக்கவே மருத்துவமனைக்கு வந்ததாக ரேணுகா ஒப்புக் கொண்டார். 

இதனையடுத்து, ரேணுகாவின் மகளிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விசாரித்துள்ளனர். அப்பொழுது, ஓட்டுநர் பரமசிவத்தின் பெயரை அவள் கூறியுள்ளார். இதை அறிந்த மருத்துவர்கள் திருநின்றவூர் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில் பரமசிவத்தை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் ஒப்புக் கொள்ள மறுத்த அவர் பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார். அவர் மீது போஸ்க்கோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com