ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த ஏதுவாக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பான கருத்துகளை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் யோசனை கூறியிருந்தார். இதன்மூலம், அரசின் செலவு குறைவதுடன் தேர்தல் பிரச்சாரத்துக்காக அரசியல் கட்சிகள் செலவிடும் நேரம் குறையும் என்ற கருத்தும் நிலவுகிறது.
இதனிடையே நாடாளுமன்றம், அனைத்து மாநில சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தில் சட்ட திருத்தம் மேற்கொள்வது குறித்து சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சிகள் என பல தரப்புகளின் கருத்துகளை சட்ட ஆணையம் கோரியுள்ளது. பொதுமக்கள் தங்களது பரிந்துரைகளையும் இதில் தெரிவிக்கலாம். மே 8-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை