காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே விவசாய சங்கத்தினர் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கங்கள் பல்வேறு கட்சிகளுடன் சேர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில் விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விவசாய சங்கங்களை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர். போராட்டத்தின் போது திடீரென விவசாயிகள் சவப்பெட்டியில் படுத்து ஒப்பாரி வைக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சவப்பெட்டியில் படுப்பதை தவித்த விவசாயிகள் சவப்பெட்டியை மட்டும் வைத்துக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?