காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதியில் பொம்மை வியாபாரம் செய்து வருபவர் தர்மலிங்கம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமரின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று அதிகாலை தனது வண்டியிலிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் தர்மலிங்கத்தை மீட்டு ஈரோடு தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தர்மலிங்கத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முன்னதாக, தர்மலிங்கம் சுவரின் மீது சாக்பீஸ் கொண்டு காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்