கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அடிக்கடி ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அரங்கேறி
வருகின்றன. குறைவான விலையில் மலிவாக கிடைப்பதால் இவற்றை சிலர் கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு
விற்கின்றனர். இதை தடுப்பதற்கு காவல்துறை, வருவாய்துறை போன்றவை தனிப்படை அமைத்து செயல்பட்டாலும், கடத்தல்
சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை தக்கலை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தக்கலை
போலீசார் தடுத்து நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுனர் ஓட்டம் பிடித்தார். பின்னர் போலீசார் அந்த வாகனத்தை
சோதனையிட்டபோது, சுமார் 100 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றின் எடை சுமார் 5 டன் என
கூறப்படுகிறது. இதையடுத்து அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை காவல் நிலையத்திற்கு
கொண்டு சென்றனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?