காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தின்போது தம்மிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இளைஞரணி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கட்சியின் மகளிரணி நிர்வாகி ஜெயமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் திமுகவினர் பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது கூட்ட நெரிசலில் நகர இளைஞரணி அமைப்பாளர் பிரபாகர் என்பவர் தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக, மகளிரணி துணை அமைப்பாளர் ஜெயமணி புகார் தெரிவித்துள்ளார். பின்னர் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டபோது இதுதொடர்பாக நகரச் செயலாளர் கணேசனிடம் புகார் செய்ததாகவும், ஆனால், அவர் பிரபாகரை கண்டிக்கவில்லை என்றும் ஜெயமணி கூறியுள்ளார். கட்சியின் மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி ஜெயமணி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். கட்சித் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தர்ணாவில் ஈடுபடுவதாக அவர் கூறினார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சமூகவலைதளமான ட்விட்டரில் ‘இடுப்புக்கிள்ளிய திமுக’ என்ற ஹேஸ்டேக் இந்தியா அளவில் ட்ரண்டில் உள்ளது.இதில் ஏராளமான மீம்ஸ்கள் கேலி சித்திரங்கள் பதிவிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
Loading More post
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
“சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” - அகமதாபாத் ஆடுகள சர்ச்சை குறித்து கோலி கருத்து
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?